/* */

சென்னை விமான நிலையத்தில் சௌதி, யூஏஇ, அமெரிக்க பணநோட்டுகள் பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ரூ.56.63 லட்சத்திற்கு சமமான சௌதி, யூஏஇ, அமெரிக்க பணநோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

சென்னை விமான நிலையத்தில் சௌதி, யூஏஇ, அமெரிக்க பணநோட்டுகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட பணநோட்டுகள்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ரூ.56.63 லட்சத்திற்கு சமமான சௌதி, யூஏஇ, அமெரிக்க பணநோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த உளவுத் தகவல் அடிப்படையில் 17.12.2021 அன்று துபாய்க்கு செல்லவிருந்த விமானத்தின் 3 பயணிகளை சோதனை செய்த போது ரூ.14.45 லட்சம் மதிப்புள்ள சௌதியின் ரியால் பணநோட்டுகள் அந்நிய செலாவணி நிர்வாகச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றொரு சம்பவத்தில் கொழும்புக்கு செல்லவிருந்த விமானத்தின் 7 பயணிகளிடம் சோதனை செய்த போது ஆசனவாயில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 பணக்கட்டுகள் கைப்பற்றப்பட்டன.

ரூ.42.18 லட்சம் மதிப்புள்ள ஐக்கிய அரபு அமீரக திர்ஹாம் பணநோட்டுகள் மற்றும் அமெரிக்க டாலர் பண நோட்டுகள் அந்நிய செலாவணி நிர்வாக சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன என்று சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 Dec 2021 2:19 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை