/* */

சோத்துல உப்பு போட்டு சாப்பிட்டா ஆதாரத்தை வெளியிடு -அமைச்சர் செந்தில்பாலாஜி

உப்பு போட்டு சாப்பிடுபவராக இருந்தால் அண்ணாமலை ஆதாரத்தை வெளியிட வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

HIGHLIGHTS

சோத்துல உப்பு போட்டு சாப்பிட்டா ஆதாரத்தை வெளியிடு -அமைச்சர் செந்தில்பாலாஜி
X

அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியின் போது.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குதல், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குதல் ,மற்றும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மின்சாரத்துறை அமைச்சர செந்தில் பாலாஜி பயனாளிகளுக்கு காசோலை, மற்றும் மின் இணைப்பு ஆணையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசிய போது, கோவை மாவட்டத்தை பொறுத்த வரை 8905 மின்மாற்றிகள் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது. கோவை மாவட்டத்தில் 203 கோடி ரூபாய் வரையில் மின்வாரியம் சார்பில் பணிகள் நடைபெற்று வருகின்றது. ஒரே ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்பு கொடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மின்வாரியத்தில் புதிய நடைமுறைகள் இல்லை. ஏற்கனவே இருக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றது. மின்வாரிய கடன்சுமை 1.59 லட்சம் கோடி , வருடத்திற்கு 13ஆயிரம் கோடி வட்டி மட்டுமே செலுத்தும் நிலை இருக்கின்றது. இதற்கான காரணம் கடந்த ஆட்சியில் 50 விழுக்காடு மின்சாரம் கொள்முதல் செய்ய செலவிடப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளில் சொந்த நிறுவு திறன் 53 மெகாவாட் மட்டும் அதிகபடுத்தப்பட்டு இருக்கின்றது. ஆய்வு பணிகள் தொடர்ந்து வருகின்றது. உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி 2500 மெகாவாட்டாக இருக்கின்றது. இடைவெளியை குறைக்க சூரிய மின்சக்தி, கேஸ் மின் உற்பத்தி ஆகியவற்றை அதிகப்படுத்தவும், ஏற்கனவே திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தாமல் வைத்திருக்கும் திட்டங்கள் செயல் படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

4 சதவீத கமிஷன் குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து இருப்பது குறித்த கேள்விக்கு, பெரியாரின் வாசகத்துடன் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றேன். நல்ல மனிதராக , சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்புடுற ஆளாக இருந்தால் அண்ணாமலை ஆதாரத்தை வெளியிட வேண்டும். ஆதாரம் இல்லாமல் இருப்பை காட்ட அவர் பேசுகின்றார். இருப்பை காட்டுவதற்காக சிலர் பேசுவதற்கெல்லாம் நேரத்தை வீண்டிக்க வேண்டாம். வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் மின்வாரியத்தில் பணியில் சேர்க்கப்படுவது தொடர்பான கேள்விக்கு, மின்வாரியத்தில் 1.46 லட்சம் பணியிடங்களில் 56 ஆயிரம் பணியிடம் காலியாக இருக்கின்றது. மின்வாரியத்திற்கு இருக்கும் கடனிற்கு 13 சதவீதம் வரை வட்டி கட்டி வருவதாக தெரிவித்தார்.

செலவீனங்களை குறைக்கவும் வெளிப்படை தன்மையுடன் இந்த அரசு செயலபட்டு வருகின்றது. புதிய பணிநியமனங்கள் வரும் போது இந்த பிரச்னைகள் முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என்றார். டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்றவர்கள் 134 பேர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று 5 மாத காலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தேர்தலின் போது முதல்வர் 505 வாக்குறுதிகள் கொடுத்தார். அதில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. துறை சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். கோவையில் சூயஸ் குடிநீர் திட்டம் குறித்து ஆய்வு கூட்டத்திற்கு பின்பு இந்த நிலையினை முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Updated On: 24 Oct 2021 2:19 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  2. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  3. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  4. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  8. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!