/* */

செல்போன் பேசிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 2 இளைஞர்கள் பலி

பெரம்பலூர் அருகே செல்போன் பேசிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 2 இளைஞர்கள் பலியானார்கள்.

HIGHLIGHTS

செல்போன் பேசிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 2 இளைஞர்கள் பலி
X
செல்லதுரை

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் ஆற்றங்கரை பாலத்தின் வடமேற்கு பகுதி வயல்காட்டில் பெரம்பலூர் கம்பன் நகரை சேர்ந்த சின்னசாமி மகன் செல்லதுரை ( 26 ) , கவுள்பாளையம கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் ராமர் ( 29 ) , மற்றும் வெங்கடேசன் ( 22 ) ஆகிய மூன்று பெரும் இன்று மதியம் அப்பகுதியில் உள்ள புளியமரத்தின் அடியில் மதுஅருந்திக் கொண்டிருந்தனர்.


அப்போது மூவரில் ஒருவருக்கு செல்போன் அழைப்பு வந்ததையடுத்து செல்போனில் பேசி உள்ளார். அந்த நேரத்தில் காற்றும் மழையும் வீசிக் கொண்டிருந்தது . அதோடு இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது இடித்த இடி புளியமரத்தின் அடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த வாலிபர்கள் மீது தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்லதுரை, ராமர் உயிரிழந்தனர் . காயமடைந்த வெங்கடேசனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .


இறந்தவர்களின் உடல் அருகில் அவர்களது உறவினர்கள் அமர்ந்து கதறி அழுதனர்.இது குறித்து தகவல் அறிந்த வருவாய் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று , உடல்களை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர் . இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது .

Updated On: 10 April 2022 4:28 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்