/* */

சில தினங்களில் விவசாயிகளுக்கு ரூ.2,000: மாநில அரசு 'அப்ரூவல்'

கிசான் சம்மன் திட்டத்தில் இன்னும் சில தினங்களில் விவசாயிகளுக்கு ரூ.2,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

HIGHLIGHTS

சில தினங்களில் விவசாயிகளுக்கு ரூ.2,000: மாநில அரசு அப்ரூவல்
X

பைல் படம்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் கடந்த 2018ம் ஆண்டு முதல் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், விவசாயிகள் பயிர் சாகுபடி செய்யத் தேவையான இடு பொருட்களை வாங்க வசதியாக உதவித்தொகை அளித்து வருகிறது.

இந்த உதவி தொகை, விவசாய குடும்பங்களுக்கு 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம், ஆண்டுக்கு 3 தவணைகளாக, ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 11 கோடியே 44 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள்.

இதுவரை 9 தவணைகளை விவசாயிகள் பெற்றுள்ள நிலையில், 10வது தவணையாக ரூ.2,000 சில நாட்களில் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். தற்போது இந்த தவணைக்காக மாநில வேளாண் துறையினர் 'அப்ரூவல்' அளித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இன்னும் சில நாட்களில் மத்திய அரசு விடுவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாநில அரசு ஒப்புதலுக்குப்பிறகு, ஒரே வாரத்திற்குள் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 48 லட்சத்து 62 ஆயிரத்து 212 பேர் கிசான் சம்மன் திட்டத்தில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விபரங்களுக்கு https://pmkisan.gov.in/BeneficiaryStatus.aspx என்ற இணையதள முகவரியில் உங்களுடைய ஆதார் எண், வங்கி கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தற்போதைய நிலையின் விபரங்களை அறியலாம்.

அதற்கான முழுவிபரங்கள் மற்றும் வழிமுறைகள்:

https://www.instanews.city/tamil-nadu/did-you-get-paid-for-the-kisan-summon-scheme-how-to-view-online-976501 என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

Updated On: 29 Nov 2021 3:44 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!