/* */

தஞ்சை அருகே தேரில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி

தஞ்சை அருகே, தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

தஞ்சை அருகே தேரில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி
X

மின்சார விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட  காவல் துறையினர். 

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. விழாவில் இன்று அதிகாலை 2 மணியளவில், தேரினை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில், தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், மின்சாரம் தாக்கி 10,பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 3 சிறுவர்கள் அடங்குவர். இதுதவிர, பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

தேரினை எடுத்து இழுத்து வரும்போது அப்பகுதியில் தண்ணீர் இருந்ததாகவும், அதனால் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தேரினை விட்டு தள்ளி நின்றதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.மின் கசிவால் தேர் எரிந்து சேதமடைந்தது.

சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்பட பலரும் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அளவில் மிகுந்த பரபரப்பையும், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 27 April 2022 7:16 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...