/* */

கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 18ம் ஆண்டு திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
X

விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள்.

மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள சாலியர்களுக்குச் சொந்தமான கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயிலில் 18-ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், பெண்கள் திருமணம் நடைபெற வேண்டியும், மாங்கல்ய பலம் வேண்டியும், வாழ்வு வளம் பெற வேண்டும் என குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். இதில், விநாயகர் பூஜை, மகாலெட்சுமி பூஜை நடைபெற்றது. பெண்கள் திருவிளக்குகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், திருவிளக்கிற்கு தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியை, கூறைநாடு சாலியர் மகாஜன சங்கத் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு மங்களப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Feb 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!