/* */

தி.மு.க.வில் கட்சி பதவியை ராஜினாமா செய்தாரா சுப்புலட்சுமி ஜெகதீசன்?

DMK Tamil News -தி.மு.க.வில் துணை பொதுச்செயலாளராக உள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்ததாக செய்தி பரவி வருகிறது.

HIGHLIGHTS

DMK Tamil News | DMK News Tamil
X

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்.

DMK Tamil News -தி.மு.க. துணை பொதுச்செயலாளர்கள் மூவரில் ஒருவராக இருப்பவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். இவர் தனது கட்சிப்பதவியை ராஜினாமா செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. முன்னாள் மாநில மற்றும் மத்திய மந்திரியான இவர் நீண்ட அரசியல் வரலாற்றிற்கு சொந்தமானவர்.


அ.தி.மு.க. நிறுவன தலைவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மூலம் 1977 இல் அரசியலுக்கு அடையாளம் காட்டப்பட்டவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். கொடுமுடியில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய சுப்புலட்சுமி ஜெகதீசன், எம்.ஜி.ஆர். மூலம் அரசியலில் அறிமுகம் செய்யப்பட்டு 1977 இல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் 1978 முதல் 1980 வரை கைத்தறித்துறை அமைச்சராக இருந்தார்.

பின்னர் அ.தி.மு.க. தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1980 இல் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். 1984 இல் தி.மு.க. சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1989 தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அமைச்சரவையில் 1991 வரை சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். 1991 இல் வெள்ளக்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1993 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1996 இல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2001 இல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2004 மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மன்மோகன்சிங் அமைச்சரவையில் சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை இணை அமைச்சராக இருந்தார்.

இவர் தற்போது ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனுக்கு பின்பு நீண்ட காலமாக துணை பொதுச்செயலாளர் பதவியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் இருந்து வருகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து பா.ஜ.க.வை சேர்ந்த டாக்டர் சரஸ்வதி போட்டியிட்டார். இதில் 206 ஓட்டு வித்தியாசத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வி அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது தோல்விக்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கட்சி பிரமுகர் ஒருவர் மற்றும் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட 2 ஒன்றிய செயலாளர்கள் காரணம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சி தலைமையிடம் புகார் செய்தார். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது சுப்புலடசுமி ஜெகதீசனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த தி மு க.உள்கட்சி தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் புகார் செய்த 2 ஒன்றிய செயலாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரது ஆதரவாளர்களுக்கும் பதவி வழங்கப்படவில்லை. மேலும் தனக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்கும் என்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் எதிர்பார்த்தார். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. இதனால் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தார். இதற்கிடையே கடந்த மாதம் ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் நடந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா மற்றும் பெருந்துறையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சுப்புலட்சுமி ஜெகதீசனும் கலந்து கொண்டார்.


இந்நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவர் ஜெகதீசன் கட்சி தலைமைக்கு எதிராக அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இதற்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கடந்த 15-ந்தேதி விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவில் பங்கேற்காமல் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் அவரது கணவர் ஜெகதீசன் ஆகியோர் புறக்கணித்தனர். இதற்கிடையே சமூக வலைதளங்களில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததாக தகவல் பரவியது. கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்ததாகவும் இதனால் அவர் ராஜினாமா செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே சமூக வலைதளங்களில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததாக தகவல் பரவியது. கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்ததாகவும் இதனால் அவர் ராஜினாமா செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஈரோடு மாவட்ட தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கொங்கு மண்டலத்தில் கட்சியை பலப்படுத்துவதில் பாரதீய ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த தி.மு.க.வின் மூத்த மகளிர் தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் பற்றிய இந்த செய்தி தி.மு.க. மேலிடத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 19 Sep 2022 11:12 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்