/* */

அ.தி.மு.க. பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் வெளிநடப்பு ஏன்? வைத்திலிங்கம் ஆவேச பேட்டி..!

அ.தி.மு.க., பொதுக்குழுவில் பன்னீர் செல்வம் வெளிநடப்பு செய்தது ஏன்? என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

அ.தி.மு.க. பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் வெளிநடப்பு ஏன்? வைத்திலிங்கம் ஆவேச பேட்டி..!
X

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்.

சென்னையில், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த ஆவேச பேட்டி: அ.தி.மு.க பொதுக்குழுவில் பொய்யாக கையெழுத்திட்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டனர். மேலும் புதிதாக கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்து தான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். அ.தி.மு.க.வின் நடைமுறைகளை மாற்றி நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் சர்வாதிகாரத்தின் உச்சக்கட்டம் என்றே சொல்ல வேண்டும்.

அ.தி.மு.க. பொதுக்குழு ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை அவைத்தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும். அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவை அவைத்தலைவர் கூட்ட முடியாது.

நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ளது. அதையும் மீறித்தான் எதிர்தரப்பினர் பொதுக்குழுவின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த பொதுக்குழு ஜூலை 11 ல் கூடுவதற்கு சாத்தியமே இல்லை. எங்கள் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர இருக்கிறோம். கட்சியின் நலன்கருதி ஓ.பன்னீர் செல்வம் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளார். இவ்வாறு, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆவேசமாக குறிப்பிட்டார்.

Updated On: 24 Jun 2022 11:35 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!