/* */

உரிமைத் தொகைக்காக அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதம்: கோவில்பட்டியில் பரபரப்பு

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ரூ. 1000 பெறுவதற்காக விண்ணப்பம் செய்து பணம் கிடைக்காதவர்கள் தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெண்கள் குவிந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

உரிமைத் தொகைக்காக அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதம்: கோவில்பட்டியில் பரபரப்பு
X

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்.

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையெடுத்து, திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அந்தத் திட்டம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாத நிலை இருந்தது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் தலைவர்கள் பலர் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், பல்வேறு கட்ட பரிசீலனைக்குப் பிறகு கடந்த 15 ஆம் தேதி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ஒரு கோடி பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ. 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்து பணம் கிடைக்காதவர்கள் மீண்டும் தங்களது விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம் என்றும் எந்த காரணத்துக்காக விடுபட்டது என ஆராயப்பட்டு தகுதி உள்ளோருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.

அதன்படி, தமிழகம் முழவதும் நேற்று முதல் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து, பணம் கிடைக்காதவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏன்? நிராகரிக்கப்பட்டது என்பதை அறிந்து மீண்டும் விண்ணப்பிப்பதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெண்கள் குவிந்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஒரே நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பம் செய்வதால் சர்வர் பிர்சனை ஏர்பட்டு விண்ணப்பிக்கும் பணி தாமதமாக உள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அரசு கால நீட்டிப்பு வழங்கி உள்ளது. இருப்பினும், பெண்களின் கூட்டம் குறைந்தபாடில்லை என்றே கூறலாம்.

இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத ஆயிரக்கணக்கான பெண்கள் இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையெடுத்து, அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு விண்ணப்பத்தின் நிலை குறித்து பெண்களிடம் கூறப்பட்டு வருகிறது.

கூட்டம் அதிகரித்து வருவதால் பெண்கள் முண்டியடித்துக் கொண்டு டோக்கன் வாங்க முயற்சி செய்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் கூட டோக்கன் வழங்க முடியாமல் அதிகாரிகள் தவித்தனர். அவர்கள் எவ்வளவு முயற்சித்த போதும் இருந்த போதிலும் பெண்கள் கூட்டம் அலைமோதுவதால் நெருக்கடி ஏற்பட்டு சில முதியவர்கள் மயக்கம் அடையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மேலும் டோக்கன் வழங்க பெண்களை ஒரு அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலை தவிர்க்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பெண்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 Sep 2023 1:53 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  2. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  3. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  4. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  5. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  6. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  9. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்