/* */

திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்

திருவள்ளூரில் மத போதகரான தந்தையை சொந்த மகனே மது போதையில் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை  அரிவாளால் வெட்டிய மகன்
X

அரிவாள் வெட்டில் காயம் அடைந்த மத போதகர்.

திருவள்ளூர் அருகே மத போதகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. சொந்த மகனே குடிபோதையில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கசவநல்லாத்தூர் பகுதியை சேர்ந்த மத போதகர் நித்தியானந்தம். இவர் தனது வீட்டின் அருகே கிறிஸ்தவ தேவாலயம் நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது மனைவி சாந்திக்கும் கடந்த ஒரு சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது.இதனால் மனைவி சாந்தி மகன் ஷாம் ஆகியோர் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு ஷாம் மற்றும் சாந்தி ஆகியோர் வீட்டிற்கு பாதிரியார் நித்தியானந்தனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது வாக்குவதாம் முற்றி ஷாம் தந்தை நித்தியானந்தனை அரிவாள் போன்ற ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதில் பாதிரியாருக்கு தலை,காது,கைகளில் அரிவாள் வெட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அருகே உள்ளவர்கள் பாதிரியாரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே திமுகவில் பெரம்பூர் மகளிர் அணி நிர்வாகி உஷா என்பவர் தூண்டுதலின் பேரில் தனது மகன் ஷாம் போதையில் தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். எனவே உடனடியாக தனது மகன் மனைவி மற்றும் உஷா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து கடம்பத்தூர் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சொந்த மகனே தந்தையை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 28 April 2024 8:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  3. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  4. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  5. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  8. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  9. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  10. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!