/* */

தோளில் சுமந்து இளைஞரை காப்பாற்றிய பெண் ஆய்வாளர்: குவியும் பாராட்டு

சென்னையில், உயிரிழந்ததாக கருதப்பட்ட வாலிபரை, தோளில் சுமந்து ஓடி காப்பாற்றிய பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரியை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

HIGHLIGHTS

தோளில் சுமந்து இளைஞரை காப்பாற்றிய பெண் ஆய்வாளர்: குவியும் பாராட்டு
X

மயக்க நிலையில் இருந்த வாலிபரை, தோளில் சுமந்து ஆட்டோவில் ஏற்றிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி.

கனமழையால் சென்னை நகரம் தத்தளிக்கிறது. இந்த சூழலில், கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்பவர், கனமழையில் சிக்கிக் கொண்டதால், கல்லறையிலேயே தங்கியுள்ளார். தொடர்ந்து மழையில் நனைந்ததால் அவரது உடல் நிலை மோசமடைந்தது, ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

இதை கவனித்த அப்பகுதி மக்கள், அவர் இறந்து கிடப்பதாக கருதி, போலீசாருக்கு தகவல் கூறியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த டி.பி. சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, உதயாவின் உடலில் அசைவு இருந்ததை கவனித்துள்ளார். உடனடியாக கொஞ்சமும் தயங்காமல், யாரையும் எதிர்பார்க்காமல், மயங்கிக் கிடந்த வாலிபர் உதயாவை, தனது தோளில் தூக்கிக் கொண்டு, ஆட்டோவை நோக்கி ஓடினார். பின்னர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், அவரை சிகிச்சைக்காகச் சேர்த்தார்.

அங்கு உதயாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, வாலிபர் உதயாவை, பெண் காவல் ஆய்வாளர் தனது தோளில் சுமந்து சென்ற புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது இந்த செயலுக்கு அப்பகுதியினர் மட்டுமின்றி நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர். இதனிடையே, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செயலை பாராட்டி உள்ளார்.

Updated On: 11 Nov 2021 9:39 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...
  7. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  8. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  9. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  10. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்