/* */

பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு: உச்ச நீதிமன்றம் அதிரடி

பேரறிவாளனை யார் விடுவிப்பது என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கும் நிலையில் ஏன் அவரை விடுவிக்கக் கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளது.

HIGHLIGHTS

பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு: உச்ச நீதிமன்றம் அதிரடி
X

பேரறிவாளன்

தன்னை உச்ச நீதிமன்றம் விடுவிக்க வேண்டுமென பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற அமர்வு இன்று விசாரணை நடத்தியது.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளனை யார் விடுவிப்பது என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கும் நிலையில் அவர் ஏன் சிறையில் இருக்க வேண்டும்? ஏன் பேரறிவாளனை விடுவிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.

மேலும், பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு. பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. எனக் குறிப்பிட்டனர்

முன்னதாக, தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரைத்த பிறகும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாக பேரறிவாளன் தரப்பு நீதிமன்றத்தில் வாதம் செய்தனர்.

Updated On: 27 April 2022 12:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!