/* */

தமிழ்நாடு காவல்துறைக்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த சிறப்பு அந்தஸ்து

தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசுத் தலைவர் சிறப்புக் கொடி அந்தஸ்து வழங்கப்படும் விழா வருகிற 31 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

தமிழ்நாடு காவல்துறைக்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த சிறப்பு அந்தஸ்து
X

இந்தியாவில் 1856-ல் அப்போது மெட்ராஸ் மாகாணத்தில் தான் முதன்முதலில் காவல் துறை உருவாக்கப்பட்டது. காவல் துறையில் கைரேகைப் பிரிவு, தடய அறிவியல் பிரிவு, வயர்லெஸ் அமைப்பு, கடலோரக் காவல் படை என்று பல பிரிவுகள் என முதன்முறையாக தொடங்கப்பட்ட பெருமைகளை உள்ளடக்கிய தமிழக காவல்துறை, இந்திய காவல் துறையின் முன்னோடி எனப்பெயர் பெற்றது.

இப்படியாக பல பெருமைகளைக் கொண்டுள்ள தமிழ்நாடு காவல்துறைக்கு, குடியரசுத்தலைவரின் சிறப்புக்கொடியை வழங்கவேண்டும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சராக இருந்தபோது கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அப்போதைய காங்கிரஸ் அரசு, 2009-ல் அதற்கான ஆணையை பிறப்பித்தது. தமிழ்நாடு காவல் துறையின் 150ஆவது ஆண்டு விழாவையொட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் சில நிர்வாக காரணங்களால் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாமல் போக, 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கிடைத்துள்ளது. இந்த சிறப்புக்கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில காவல் துறைக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல் துறைக்கு குடியரசுத்தலைவரின் சிறப்புக்கொடி அந்தஸ்து வழங்கும் விழா, பிரம்மாண்டமான முறையில் வருகிற 31 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில் இந்த விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், உள்துறைச்செயலாளர், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் காவல் அலுவலர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு காவல்துறைக்கு வழங்கப்பட உள்ள குடியரசுத்தலைவரின் சிறப்புக் கொடியானது, ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்துடன் வாய்மையே வெல்லும் என்று பொறிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு காவல் துறையின் சின்னத்தைப் பொருத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சின்னம் பொறித்தப் பட்டையை காவலர் முதல் டிஜிபி வரை அனைவரும் தங்கள் சீருடையின் வலது தோள்பட்டையில் அணிந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் சிறப்புக்கொடி என்பது மாநில/யூனியன் பிரதேசத்தின் ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீஸ் படைகள் தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் ஒரு சிறப்புக் கொடியாகும்

Updated On: 29 July 2022 9:55 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்