/* */

கோவை, திருப்பூர் விசைத்தறி கூலி பிரச்னை: எட்டு சங்கங்கள் உடன்பாடு

எட்டு சங்க நிர்வாகிகளின் ஒப்புதலுடன் விசைத்தறி கூலி உயர்வு பிரச்னைக்கு அமைச்சர் முன்னிலையில் தீர்வு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கோவை, திருப்பூர் விசைத்தறி கூலி பிரச்னை:  எட்டு சங்கங்கள் உடன்பாடு
X

கோப்பு படம் 

கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. பல்லடம், சோமனூர், மங்கலம், புதுப்பாளையம், கண்ணம்பாளையம், வேலம்பாளையம், அவினாசி, தெக்கலூர், மற்றும் பெருமாநல்லூர் என, இரண்டு மாவட்டத்தில், 9 விசைத்தறி சங்கங்கள் உள்ளன.

கடந்த, 2014 முதல் கூலி உயர்வு வழங்கப்படாததை கண்டித்து, ஜன., 9 முதல் இரண்டு மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், சோமனூர் ரகத்துக்கு, 19, பல்லடம் ரகத்துக்கு, 15 சதவீத கூலி நிர்ணயிக்கப்பட்டது. இதை உறுதிப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை கூட்டம், நேற்று திருப்பூர் அருகே மங்கலம் பகுதி தனியார் மண்டபத்தில் நடந்தது.

இதில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 19 மற்றும் 15 சதவீத கூலி உயர்வு வழங்குவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் உறுதி அளித்தனர். இதன்படி, கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்று, பல்லடம், வேலம்பாளையம், கண்ணம்பாளையம், மங்கலம் பகுதிகளுக்கு உட்பட்ட விசைத்தறிகள் நாளை (17ம் தேதி) முதல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.

Updated On: 16 Feb 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  2. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  3. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  4. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  5. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  6. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  7. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  8. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  9. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  10. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு