/* */

மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?

Masala Idli Recipe - இரவில் மீந்து போன இட்லி இருந்தால், மறுநாள் காலையில் மசாலா இட்லியாக செய்து சாப்பிடுங்கள். சுவையில் அசந்து போவீர்கள்.

HIGHLIGHTS

மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
X

Masala Idli Recipe - ருசியான மசாலா இட்லி  செய்தல் (கோப்பு படம்)

Masala Idli Recipe - இரவில் மீந்து போன இட்லி இருந்தால், மறுநாள் காலையில் மசாலா இட்லியாக செய்து சாப்பிடுங்கள். சுவையில் அசந்து போவீர்கள். இரவில் நிறைய இட்லிகள் செய்து மீந்து போய்விட்டது என்றால் அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை.

அப்படியானால் அந்த இட்லியை தூக்கிப் போடாமல் அதைக் கொண்டு சுவையான காலை உணவை செய்யுங்கள். பொதுவாக இட்லி மீந்து போனால் உப்புமா செய்வது தான் வழக்கம். ஆனால் இன்று மீந்து போன இட்லியைக் கொண்டு மசாலா இட்லியை செய்யுங்கள். இந்த மசாலா இட்லி மிகச்சிறந்த காலை உணவு மட்டுமின்றி, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். தக்காளி சட்னியுடன் இந்த ஒரு பொருளை மட்டும் எக்ஸ்ட்ரா சேர்த்துக்கோங்க. டேஸ்ட் செமயா இருக்கும்..

கீழே மீந்து போன இட்லியைக் கொண்டு செய்யக்கூடிய மசாலா இட்லியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள்:

* மீந்து போன இட்லி - 6

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் - 1/2 கப்

* குடைமிளகாய் - 1/2 கப்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் - 5

* தக்காளி - 1 கப்

* உப்பு - சுவைக்கேற்ப

* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

* பாவ் பாஜி மசாலா - 1/2 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்


செய்முறை

* முதலில் இட்லிகளை துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து வதக்கி, மேலே உப்பு தூவி, வெங்காயம் நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 30 நொடிகள் வதக்க வேண்டும்.

* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். * தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா சேர்த்து கிளறி, 1 நிமிடம் வதக்க வேண்டும்.

* பிறகு இட்லி துண்டுகளை சேர்த்து, மசாலாக்கள் இட்லியுடன் நன்கு ஒன்று சேரும் வரை கிளறி இறக்கி மேலே எலுமிசசை சாறு மற்றும் கொத்தமல்லியை தூவினால், சுவையான மசாலா இட்லி ரெடி..

Updated On: 29 April 2024 9:17 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!