/* */

ஸ்கெட்ச் போட்டது போலீஸ் அண்ணாமலை...!சிக்கிக்கொண்ட குருவிகள்..!

போதை மாபியா கும்பல் தமிழகத்தில் பலருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என அண்ணாமலை சொல்லியிருந்தார்.

HIGHLIGHTS

ஸ்கெட்ச் போட்டது போலீஸ் அண்ணாமலை...!சிக்கிக்கொண்ட குருவிகள்..!
X

அண்ணாமலை ஐபிஎஸ் (கோப்பு படம்)

டெல்லியில் சிக்கிய போதை மாபியா கும்பல் பற்றிய ஆபரேசன் TNDrugoperation அப்படீங்கிற பேர்ல 5 மாசமாச ரகசியமா இன்ச் பை இன்ச்சா நடந்துட்டு இருந்துருக்கு.

ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை, நியூசிலாந்து ஆப்கான், அமெரிக்கா, கனடா, மலேசியா, தாய்லாந்துனு கண்டெய்னரிலும் கார்கோவுலேயும் சுத்திகிட்டு இருந்த சத்துமாவு உணவு பொருள், பால்பவுடர் தேங்காய் மிக்ஸ் பெயரில் சத்தமில்லாமல் கண்டுபிடிக்க முடியாத கலவை வடிவில் சுத்திகிட்டு இருந்த இந்த சூடோ மெத்தடைன் நியூசிலாந்து போலிசால் 11 சின்ன சந்தேகத்தின் அடைபடையில்.... சின்ன அளவில் டெஸ்ட்க்கு அனுப்ப பட்டிருக்கிறது.

பரிசோதனை முடிவு நியூசிலாந்து போலீசாரை நிலை குலைய வைத்திருக்கிறது. இது மூளையில் ரத்த கசிவை வரவைத்து பாரலைஸை தூண்டும். பேச்சை உளற வைத்து மெல்லக்கொல்லும் மெத்தடமைன் என்னும் அமைன் வேதிப்பொருள் என்று கண்டறிந்ததும் அதிர்ந்து போனார்கள். உசாரான நியூசிலாந்து போலிஸ் உணவு பொருள் வடிவில் உள்ளே வரும் இந்த சுலோ பாய்சனை பற்றி மத்திய உளவுத்துறைக்கும் NCBக்கும், மத்திய உள்துறைக்கும் தகவல் சொல்லியது.

மேலும் இதே போன்ற சஸ்பெக்டட் பொருள், ஒரே கம்பெனி பொருள் தமிழகத்தின் சென்னை மதுரை, திருச்சி, கோவை வழியாகவும் பஞ்சாப், கல்கத்தா வழியாகவும் இலங்கை பங்களாதேஷ் ஆப்கான் வழியாககவும் தங்கள் நாட்டிற்கு 45 முறை டெலிவரி ஆகியிருக்கிறது போன்ற விவரங்களை அடுக்கியது. உஷாரான இந்திய அரசாங்கம் TNDrug operations என்ற பெயரில் தனிக்குழுவை அமர்த்தி விசாரிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த NCB புலனாய்வு அமைப்பு அண்ணாமலையின் கண்காணிப்பின் கீழ் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் சென்னை வந்து கொரியர் அனுப்பும் அலுவலகத்தின் எதிரில் உள்ள பகுதியில் சிசிடி கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்து ஆதாரங்களை சேகரித்தனர். பேக்கிங் நடைபெறும் ஹோட்டல் ரெஸ்ட்ராண்ட்களை கண்காணித்து கொண்டிருக்க முதன் முறையாக 1 மாசத்திற்கு முன் உள்நாட்டு புக்கிங்காக " சென்னை டூ டெல்லிக்கு" இந்த பொருள் புக் ஆக. "எலி" பொறியில் வந்து தானாக சிக்கியதை கண்டு குஷியானது.

மேலும் அடுத்தடுத்த சில தினங்களில் மட்டுமே 3 முறை டெல்லிக்கு புக் செய்யபட்டுள்ளதையும் அறிந்து போதை மருந்து கடத்தல்னு தெரிஞ்சும் ஆதாரம் திரட்டுறத்துக்காக Flow டெலிவரி பண்ண விட்டு கையும் களவுமாக பிடிக்க காத்திருந்தது. கண கச்சிதமாக 4 முறை புட்பாக்ஸ் வடிவில் மீண்டும் புக் ஆக தற்போது முக்கிய புள்ளியின் தம்பியோடு தட்டி தூக்கி இருக்கு.இதுக்கு மேல இதை விவரிக்க முடியாது இந்த ஆபரேசன் எக்ஸிகியூட் பண்ணுன ஸ்டோரியே கேட்கும் போதே செம திரில்லங்கா இன்ட்ரஸ்டிங்கா இருக்கு பட் இதை வெளியில் சொல்ல முடியாது .சோ ஸீக்ரெட்

ஆனா இந்த ஆபரேசன்ல ஸ்கெட்ச் போட்டது அரசியல்வாதி அண்ணாமலை அல்ல....போலீஸ் அண்ணாமலை.. இனி எல்லாம் அவன் விட்ட வழி..

Updated On: 12 April 2024 3:50 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு