/* */

இரண்டு முக்கிய மேம்பாலத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்

1.கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள் இரயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலம். 2.வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பாலம்.

HIGHLIGHTS

இரண்டு முக்கிய மேம்பாலத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்
X

கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள் இரயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலம், வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பாலம் – ஆகியவற்றை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.


இன்று (15.12.2021) காலை 8.30 மணியளவில் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற விழாவில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள், கூடுவாஞ்சேரி- சிங்கப்பெருமாள் கோவில் இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே மேம்பாலம் வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பால பணிகளை துவக்கி வைத்தார்.

அமைச்சர் பாலப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகையில், கூடுவாஞ்சேரி- சிங்கப்பெருமாள் கோயில் இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே இருப்புப் பாதை கடவு எண்.47க்கு பதிலாக ரூ.90.74 கோடியில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணி 30-மாதக் காலத்திற்குள் நிறைவடையும். இந்த இரயில்வே மேம்பாலப்பணி நிறைவுற்றவுடன், ஓரகடம் தொழிற்பேட்டை ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் வாகனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பாலப் பணி ரூ.26.64 கோடி மதிப்பீட்டில் 18- மாதக் காலத்திற்குள் நிறைவடையும். இந்த பல்லடுக்கு மேம்பாலப்பணி நிறைவுற்றவுடன், படப்பை, ஓரகடம் செல்லும் வாகனங்களுக்கு பேருதவியாக இருக்கும். ஓரகடம் தொழிற்பேட்டைக்கு, தென் தமிழ்நாட்டிலிருந்து மூலம் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு இந்த இரண்டு பாலங்களால் காலதாமதமின்றி விரைவில் சென்றடைய பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்த துவக்க விழாவில் ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள், காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் ஸ்ரீகணேசன் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் ம.வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் பங்கேற்றனர்.

Updated On: 15 Dec 2021 5:35 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?