/* */

சமையல்காரர் மீது கோபம் கொண்ட எம்.ஜி.ஆர்: காரணம் இது தான்.

சமையல்காரரிடம் ஒரு செல்லக் கோபம். வேலையை விட்டு நிறுத்தாமல், வேலை பார்க்காமலேயே அவருக்கு மாதாமாதம் சம்பளத்தையும் கொடுத்து வந்தார்

HIGHLIGHTS

சமையல்காரர் மீது கோபம் கொண்ட எம்.ஜி.ஆர்: காரணம் இது தான்.
X

எம்ஜிஆர்

எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்த சமயம் அது. தனது இராமவரம் தோட்டத்தில், இரவு 11மணிக்கு தன் செல்ல நாயை உடன் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் சுற்றி வந்தார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த வேலைக்காரரின் 5 வயது சிறுவனை எழுப்பி, அவனிடம் ”பள்ளிக்கூடம் போனயா?”என கேட்டார். அந்த சிறுவன் ”போனேன் “ என பதில் சொன்னான்.

அடுத்து ”சாப்பிட்டாயா?” என கேட்டார். அந்த சிறுவன் “ம்… சாப்பிட்டேன்“ என பதில் கூறினான். “என்ன சாப்பிட்ட கண்ணா ?” என திரும்பவும் எம்.ஜி.ஆர்., கேட்டார். சிறுவன் தான் சாப்பிட்டதை எல்லாம் ஒப்புவிக்கிறான். சிறுவனுக்கு முத்தம் தந்துவிட்டு அவனை தூங்க சொல்கிறார் மக்கள் திலகம்.

தோட்டத்தை சுற்றி முடித்த பின், தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சமையல்காரர் மணியை எழுப்பி, ”டேய் மணி, நீ இங்கு வேலை செய்ய வேண்டாம். கிளம்பு “ என கூறி விட்டார். சமையல்காரர் மணியும் காரணம் எதுவும் கேட்கவில்லை. மணியும் அந்நேரத்தில் வெளியே கிளம்பி விடுகிறார். ஆனால் மணிக்கு தெரிந்திருந்தது, தலைவரின் கோபம் சற்று நிமிடத்திற்கு தான் என்று. அவருக்கு காரணம் எதுவும் புரியவில்லை

அதன் பிறகு தினமும் எம்.ஜி.ஆர் வெளியே கிளம்பும்போது, மணி நிற்பார். அவரைப் பார்த்தவுடன் எம்.ஜி.ஆர் முகத்தை திருப்பி கொள்வார். இப்படியே மூன்று மாதங்கள் ஓடின. எம்.ஜி.ஆர் கண்டுகொண்ட பாடில்லை. ஆனால் சம்பளம் மட்டும் அவர் வீட்டுக்கு சென்று விடும்.

ஒருநாள் ஆனது ஆகட்டும் என்று நேரே அவர் இடத்திற்கு சென்று தலைவர் காலில் விழுந்துவிட்டார் மணி. ”அண்ணே நான் என்ன தப்பு செஞ்சேன்னு எனக்கே தெரில. என் மீது கோபம்ன்னா நாலு அடி கூட அடிச்சிருங்கண்ணே.” என்றார். எம்.ஜி.ஆர் புன்னகையுடன், மணியிடம் ”டேய் மணி, நான் உன்கிட்ட என்ன சொல்லியிருக்கேன், நான் சாப்பிடறது தான் வேலைக்காரர்களும் சாப்பிடனும் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது-ன்னு சொல்லியிருக்கேன், ஆனா அந்த பையனுக்கு ஏன் நான் சாப்பிட்ட மீனை வைக்கல?“

மணிக்கு ஒன்று புரியல. எப்போ தலைவர் மீன் சாப்பிட்டார், நாம எப்போ அதை மறந்தோம்-ன்னு எதுவும் நினைவில் இல்லை. இருந்தாலும் சமாளிப்பதற்கு “அண்ணே மன்னிச்சிடுங்கண்ணே . வேலை இருந்ததால அதை மட்டும் மறந்திருப்பேன், என்ன மீண்டும் இங்க வேலை செய்ய விடுங்கண்ணே “ என்று கேட்டுக்கொண்டார் . “சரி போய் வேலையை செய். திரும்பவும் இந்த மாதிரி தவறு இருக்க கூடாது ” என்றுஉத்தரவிட்டுவிட்டார் . மணிக்கு ஏக சந்தோஷம்.

இதில் இன்னும் சுவாரஸ்யம் உள்ளது. மணி வெளியே அனுப்பிவிட்டு , தன் உதவியாளரிடம் எம்.ஜி.ஆர்.. “அந்த சமையல்காரர் மணியை கோபத்துல வெளிய அனுப்பிட்டேன் . அவனை தினமும் நம் தோட்டத்து கேட் அருகே நான் புறப்படும்போது நிற்க சொல்லு ” என்று உத்தரவிடுகிறார். அதன்படி தான் மணியும் நின்றார். தலைவர் காரில் புறப்படும்போது, மணி எம்.ஜி.ஆரை பார்த்து வணங்குவார். உடனே தலைவர் சட்டென முகத்தை திருப்பிக் கொள்வார் அதான் கோபமாம்.

இப்படி மூன்று மாதங்கள் தன் கோப நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் எம்ஜிஆர். அதன் பின் தான் மணியை வீட்டுக்கு வரச்சொல்லி வேலைக்கு சேர்த்துள்ளார்.

இது என்ன மாதிரியான சாமார்த்தியம். தனது சமையல்காரரிடம் ஒரு செல்லக் கோபம். வேலையை விட்டு நிறுத்தாமல், வேலை பார்க்காமலேயே அவருக்கு மாதாமாதம் சம்பளத்தையும் கொடுத்து வந்தார். உண்மையில் இப்படியொரு தலைவன் மிகச் சமீபத்தில் வாழ்ந்தாரா?

சொல்லபோனால் இது போன்ற மனித நேயம் மிக்க தலைவரை கண்ணால் பார்த்தவர்கள் கூட முன் ஜென்மத்தில் மிகப்பெரிய புண்ணியம் செய்தவர்களாக தான் இருப்பார்கள். இப்படிப்பட்ட தலைவனை இந்த மாநிலம் மீண்டும் என்றைக்கு பெறப்போகிறது? இவருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வாரியார் ஒப்புக்கு தந்துவிடவில்லை என்பதை இந்த நிகழ்விலேயே அறியலாம்

Updated On: 1 April 2023 4:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!