Begin typing your search above and press return to search.
குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை
மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் ரோட்டைச் சேர்ந்தவர் துர்காதேவி(35). இவருக்கும் அருண்குமார் என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் அருண்குமார் குடித்துவிட்டு வந்து அடிக்கடி பிரச்னை செய்ததால் துர்காதேவி கணவர் கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார் தொடர்ந்து துர்காதேவியை துன்புறுத்தியதால், மனமுடைந்த தூர்காதேவி ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, துர்காதேவியின் தாயார் கற்பகம் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து துர்காதேவி உடலை பிரேதபரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.