/* */

இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி குத்தாலம் கடைவீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
X

குத்தாலம் கடைவீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருமண வரம் அருளும் திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 8ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அன்று இரவு சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. அப்போது கோவிலில் இரு சமூகத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. அதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த முத்துகுமார் , மாரியப்பன், சுந்தரமூர்த்தி ஆகியோர் காயமுற்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால் குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி, பாதிக்கபட்ட பட்டியலின மக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பட்டியல் இன மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத குத்தாலம் காவல்நிலையத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் குத்தாலம் கடைவீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

விடுதலை சிறுத்தை கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கு மேற்பட்ட கட்சியினர் பங்கேற்று பாதிக்கபட்டவர்களுக்கு, நியாயம் வழங்க கோரியும், தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத, குத்தாலம் காவல் கோஷம் எழுப்பினர்.

Updated On: 12 May 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?