/* */

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா
X

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார் பெருமாள்.

மயிலாடுதுறை திருஇந்தளூரில் புகழ்பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது ஆலயமும், பஞ்சரங்க ஆலயங்களில் ஐந்தாவது ஆலயமுமான ஸ்ரீபரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று அதிகாலைா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பகல்பத்து உற்சவத்தின் 10-ஆம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி, பெருமாள் மோகினி அலங்காரத்தில் பதக்கம் தாங்கி உள் பிரகார வீதி உலா எழுந்தருளினார்.

தொடர்ந்து திருவந்திக்காப்பு மண்டபத்திற்கு எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, படியேற்ற சேவை நடைபெற்றது. இதில், திருமங்கையாழ்வார் பாடிய 10 பாசுரங்களும் பாடப்பட்டது. ஒவ்வொரு படியாக பெருமாளை பல்லக்கில் தாலாட்டுவது போல் ஐந்து படிகளைக் கடந்து கோயில் கர்ப்பகிரகத்திற்கு எழுந்தருளினார்.

Updated On: 13 Jan 2022 3:26 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்