/* */

மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்

மோகனூர் சர்க்கரை ஆலையில் அதிகபட்ச ஓய்வூதியம் கோரி ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
X

அதிகபட்ச ஓய்வூதியம் வழங்கக்கோரி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற பணியாளர்கள் 

ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு, உயர்ந்தபட்ச ஓய்தியம் பெற்றுத்தரக்கோரி மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் அலுவலகத்தை, முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படுகிறது. இந்த ஆலையில், கரும்பு அரவையின்போது, 3 ஷிப்ட் முறையில் தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள். மற்ற காலங்களில், காலை 8 முதல், மாலை 5 மணி வரை ஒரே ஷிப்ட் நடைபெறும். இங்கு, பணியாற்றியவர்களில், 630 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.

அவர்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 500 முதல், அதிக பட்சம் ரூ. 2,000 வரை மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது. இது, அவர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம். இந்த நிலையில், அதிகபட்ச ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த, 10 ஆண்டுகளாக ஓய்வுபெற்ற பணியாளர்கள் போராடி வருகின்றனர். இது தொடர்பாக உயர்ந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அனுப்பியிருந்தனர்.

ஒரு ஆண்டுக்கு மேலாகியும் விண்ணப்பத்திற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக, வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், ஆணையரை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், டி.என்.பி.எல்., சேஷாயி, ஆர்.எம்.எஸ்., பொன்னி சர்க்கரை ஆலை போன்ற நிறுவனங்களில், பணியாற்றி, ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு உயர்ந்தப்டச ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஓய்வு பெற்றவர்களுக்கும் உயர்ந்தபட்ச ஓய்வூதியம் வழங்குவதற்கு, சில ஆவணங்களை வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் இருந்து கேட்டுள்ளனர். அந்த ஆவணங்களை ஆலை நிர்வாகத்தினர் இதுவரை வழங்கவில்லை. ஆலை நிர்வாகத்தின் இந்த மெத்தன போக்கை கண்டித்து, 150க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற பணியாளர்கள், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வந்த மேலாண் இயக்குனர் மல்லிகா, ஒரு வாரத்தில், உரிய ஆவணங்களை அனுப்பி, உயர்ந்தபட்ச ஓய்தியம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதையடுத்து, முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 4 May 2024 2:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...