/* */

ஊராட்சி ஓ.எச்.டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் மனு அளிக்கும் போராட்டம்

ஓ.எச்.டி ஆப்ரேட்டர் அனைவருக்கும் சமஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

HIGHLIGHTS

ஊராட்சி ஓ.எச்.டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள்  மனு அளிக்கும் போராட்டம்
X

மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஓ.எச்.டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களின் மனு அளிக்கும் போராட்டம் 

மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஓ.எச்.டி ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஊராட்சியில் பணிபுரியும் ஓ.எச்.டி ஆப்ரேட்டர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில், ஓ.எச்.டி ஆப்ரேட்டர், தூய்மை பணியாளர், தூய்மை காவலர் அனைவருக்கும் கொரோனா நிவாரண தொகை வழங்கிட வேண்டும், ஓ.எச்.டி ஆப்ரேட்டர்கள் அனைவருக்கும் சம ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 7-வது ஊதியக்குழு அரியர் தொகை, சிறப்பு படி ரூ.200, தொட்டி சுத்தம் செய்யும் ஊதியம் ஆகியவற்றை வழங்கிட வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு பணிக்கொடை ரூ. 50,000, மாத ஓய்வூதியம் ரூ.2000 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கை அடங்கிய மனுவை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் உமாவிடம் 500க்கும் மேற்பட்டோர் வழங்கினர்.

Updated On: 23 Aug 2021 4:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  4. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  5. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  7. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  8. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  9. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  10. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...