/* */

மயிலாடுதுறை அருகே மனைவி, 2 மகள்களுடன் மாயம் : கணவன் போலீசில் புகார்

மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை கிராமத்தில் மனைவி, இரண்டு மகள்களுடன் காணவில்லை என்று கணவன் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே மனைவி,  2 மகள்களுடன் மாயம் : கணவன் போலீசில் புகார்
X

பைல் படம்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல்சரகத்திற்கு உட்பட்ட கொற்கை கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவர் அதே ஊரை சேர்ந்த உறவினர் சந்திரன் எனபவரது மகள் மகேஸ்;வரி(36) என்பவரை கடந்த ௧௩ வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ௧௨ வயதுக்கு உட்பட்ட 2 மகள்கள் உள்ளனர்.. ராஜ்குமார் துபாய் அபுதாபியில் பெயின்டிங் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 40 நாட்களுக்கு முன்பு கொற்கை கிராமத்திற்கு வந்த ராஜ்குமார் மனைவி மகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 1ம்தேதி அதிகாலை தூங்கி எழுந்த ராஜ்குமார் வீட்டில் இருந்த மனைவி மற்றும் தன் பெண் பிள்ளைகளை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

மேலும் வீட்டு பீரோவில் இருந்த 18பவுன்நகை மற்றும் 45 ஆயிரம் ருபாய் பணத்தையும் காணவில்லை. உடனடியாக தனது மாமனார் சந்திரன் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் மனைவி மற்றும் பிள்ளைகள் கிடைக்காததால் மணல்மேடு காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தான் சம்பாதித்து வாங்கிய நகைகளை அடகு வைத்ததால் மனைவி மகேஸ்வரியுடன் சிறுசிறு தகராறு ஏற்பட்டதாகவும், நியூட்ரிசியன் வேலைக்கு சென்ற மகேஸ்வரி அடிக்கடி போன் செய்து ஒருசிலரிடம் பேசுவது பிடிக்காமல் கண்டித்ததாகவும் கூறினார்.

ராஜ்குமார் மனைவி மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளதாகவும் காவல்துறையினர் உரிய விசாரணை செய்து தனது மனைவியையும் 2 மகள்களையும் மீட்டுதர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Updated On: 7 Jun 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  3. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  5. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  7. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  8. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்