/* */

படகு கவிழ்ந்து மீனவர் பலி

பழையாறு அருகே, மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து மீனவர் பலி

HIGHLIGHTS

படகு கவிழ்ந்து மீனவர் பலி
X

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, பழையாறு சுனாமி நகரை சேர்ந்தவர் நடராஜன், வயது 44. இவர் இன்று காலை துறைமுகத்தில் இருந்து பைபர் படகு ஒன்றில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

ஒன்றரை நாட்டிகல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்தது. இதில் கடலில் விழுந்த நடராஜன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

சக மீனவர்கள் நடராஜனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தகவலறிந்த கடலோர காவல் படை போலீசார் விரைந்து வந்து நடராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 9 May 2021 5:34 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை