டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்வு,கரூரில் 1,589 பேர் எழுதினர்
கரூரில் குரூப்-1 பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. இதில் 1,589 மட்டுமே தேர்வு எழுதினர்.
டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப்-1 பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்து தேர்வு கடந்த ஏப்ரல் 5ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் ஊரடங்கு உத்தரவால் இந்த எழுத்து தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தேர்வுக்காக கரூர் மாவட்டம் முழுவதும் 11 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
குரூப் 1 தேர்வு எழுதுவதற்காக கரூர் மாவட்டத்தில் 3,139 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 1,589 நபர்கள் மட்டுமே தேர்வு எழுதினார்கள். 1,550 நபர்கள் தேர்வுக்கு வரவில்லை.மாவட்ட ஆட்சியர் மலர்விழி தான்தோன்றிமலை அரசு கலை கல்லூரியில் நேரில் ஆய்வு நடத்தினார். தேர்வு மையங்களுக்கு செல்ல பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தது.