/* */

பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி

Tirupur News- பல்லடத்தில் நடந்த மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், திருப்பூா் விஸ்வாஸ் ஓட்டல் அணி முதல் பரிசை வென்றது.

HIGHLIGHTS

பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
X

Tirupur News- கைப்பந்துப் போட்டியைத் தொடங்கிவைத்த பல்லடம் போலீஸ் டிஎஸ்பி விஜிகுமாா்.

Tirupur News,Tirupur News Today- பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் திருப்பூர், தாராபுரம், பல்லடம், அவிநாசி, உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 24 அணிகள் கலந்துக்கொண்டு விளையாடின.

திருப்பூா் மேற்கு ரோட்டரி சங்கம், இ.டபுள்யூ.ஏ. நண்பா்கள் சாா்பில் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் விஜிகுமாா் தொடங்கிவைத்தாா். ஏ.பிரபு வரவேற்றாா். போட்டியில் 24 அணிகள் கலந்து கொண்டன.

இதில், முதலிடத்தைப் பிடித்த திருப்பூா் விஸ்வாஸ் ஓட்டல் அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற உடுமலை யூ.வி.சி. அணிக்கு ரூ.7500, மூன்றாமிடம் பெற்ற திருப்பூா் வி.ஆா்.பிரதா்ஸ் அணிக்கு ரூ.5 ஆயிரம், நான்காமிடம் பெற்ற பல்லடம் பி.ஆா்.சி. அணிக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், திருப்பூா் மேற்கு ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.சுரேந்திரன், பல்லடம் தமிழ்ச் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன், அறம் அறக்கட்டளைத் தலைவா் செந்தில், செயலாளா் ஷேக்மக்தூம், நகராட்சி கவுன்சிலா் பாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 2 May 2024 1:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  2. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  4. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  5. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  6. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  8. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  10. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு