/* */

பழைய பென்சன் திட்டம். வரிந்து கட்டும் அரசு ஊழியர்கள்

பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்களிலும் போராட அரசு ஊழியர்கள் தயாராகி வருகின்றனர்

HIGHLIGHTS

பழைய பென்சன் திட்டம். வரிந்து கட்டும் அரசு ஊழியர்கள்
X

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு மாநில அரசு ஊழியர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி ஆலோசித்து வருகின்றனர். ஜார்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பழைய பென்சன் திட்டம் இருப்பது போல அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அனைத்து மாநிலங்களிலும் இந்தப் போராட்டத்தினை நடத்தவும், இதில் அரசு ஆசிரியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளனர். இவர்கள் போராட்டத்தில் பங்கெடுத்ததால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். சுகாதாரம் மற்றும் காவல்துறையினர் போன்ற அவசர சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட திட்டமிட்டுள்ளனர்.

2005 பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு நியமிக்கப்பட்டவர்களில் தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பெறும் சொற்பமான ஓய்வூதியமே பெறுகின்றனர். தேசிய பென்சன் திட்டம் 2009ஆம் ஆண்டில் தான் நடைமுறைக்கு வந்தது. "இதுவரை சுமார் பல ஆயிரம் ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு 1,200 ரூபாய்க்கும் குறைவாக பென்சன் மட்டுமே கிடைக்கிறது. இது அரசு ஊழியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஒரு ஊழியருக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.12,000 கிடைக்கும். மேலும் 25 ஆண்டுகள் சேவை முடித்தவர்களுக்கு அடிப்படை மற்றும் பிற கொடுப்பனவுகளில் 50 சதவீதம் கிடைக்கும்" என்றனர்.

பழைய ஓய்வூதிய முறையை மீட்டெடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் அனைவரும் ஒரே குரலில் ஒரே நேரத்தில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது ஒரு பெரிய போராட்டத்தின் ஆரம்பம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Updated On: 24 Aug 2022 5:31 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  5. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  6. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  10. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு