/* */

தூத்துக்குடி சென்ற விமானம் மோசமான வானிலையால் திருச்சியில் தரையிறங்கியது

சபாநாயகா் அப்பாவு உட்பட 35 பயணிகள் திருச்சி விமானநிலையத்தில் தவிப்பு

HIGHLIGHTS

தூத்துக்குடி சென்ற விமானம் மோசமான வானிலையால் திருச்சியில் தரையிறங்கியது
X

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு தமிழக சபாநாயகா் அப்பாவு உட்பட 35 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம்,தூத்துக்குடியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் திரும்பி வந்து, திருச்சியில் தரையிறங்கியுள்ளது.

சென்னையிலிருந்து இன்று பகல் 1.55 மணிக்கு ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றது.அந்த விமானத்தில் தமிழ்நாடு சபாநாயகா் அப்பாவு உட்பட 35 போ் பயணித்துக்கொண்டிருந்தனா்.

விமானம் தூத்துக்குடியை நெருங்கிக்கொண்டிருந்தபோது,அங்கு பலத்த காற்று,இடி மின்னலுடன் மோசமான வானிலை நிலவியது.இதையடுத்து விமானம் தூத்துக்குடியில் தரையிறங்க முடியாமல் விமானம் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்த விமானம்,வழியில் திருச்சி விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது.தூத்துக்குடியில் வானிலை சீரடைந்த பின்பு விமானம் மீண்டும் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகா் அப்பாவு உட்பட 35 பயணிகள் திருச்சி விமானநிலையத்தில் தவித்துக்கொண்டிருக்கின்றனா்.

Updated On: 25 Nov 2021 10:55 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  2. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  3. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  4. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  5. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  6. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  7. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  8. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  9. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  10. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...