/* */

கொரோனா ஊரடங்கு: பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

கொரோனா ஊரடங்கு: பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிப்பு
X

பைல் படம்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிக்க அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுப்பு தொடர்பாக 11 வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசின் ஆணையங்கள், வாரியங்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், சங்கங்கள் உள்ளிட்டவற்றின் ஊழியர்களுக்கான வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், 10.05.2021 – 04.07.2021 ஊரடங்கு காலக்கட்டத்தில் அத்தியாவசியத் துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் பணியாற்றினர் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10.05.2021 க்கு முன்னர் விடுமுறைக்கு விண்ணப்பித்த அதிகாரிகள் மற்றும் ஊரடங்கு காரணமாக விடுப்புக் காலம் முடிந்தும் 04.07.2021 வரை பணியில் சேர முடியாதவர்களுக்கு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் கொரோனா சிகிச்சையில் இருந்தால் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், வசிக்கும் இடம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் சிறப்பு தற்செயல் விடுப்பாகக் கருதப்படும். அரசு ஊழியர்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, மேற்கண்ட விலக்கு காலத்தை பணிக்காலமாக கருத வேண்டும்.

ஊரடங்கின்போது இணை நோய்கள், 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நோய்கள் உள்ள அரசு ஊழியர்கள், மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பித்தால், பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படவதுடன், அது பணிக்காலமாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தைப் பொறுத்த வரையில், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய், நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்துத் முடிவு செய்யுமாறு துறைச் செயலர்களுக்கு தலைமைச்செயலாளர் ஆணையிட்டுள்ளார்.

Updated On: 18 Feb 2023 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  2. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  4. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  5. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  6. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  10. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை