/* */

தேசிய நூலாக திருக்குறள்: கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

திருக்குறள் நூலை தேசிய நூலாக பிரதமர் அறிவிக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

தேசிய நூலாக திருக்குறள்: கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்
X

கவிஞர் வைரமுத்து 

உலக பொதுமறையாம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென பிரதமருக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் இருந்து வட அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில், வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் கார்ல்டுவெல் வேல் நம்பியிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. இதில் இரு சிலைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், துணை அதிபர் கமலா ஹாரிஸூக்கும் வழங்கப்பட உள்ளது.

சென்னை அடையாறில் இதற்காக நடைபெற்ற நிகழ்வில், கவிஞர் வைரமுத்து பேசும்போது, குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்ட பிரதமர், திருக்குறளை மேற்கோள் காட்டும்போது மகிழ்ச்சியடைகிறோம். தமிழன் என்று பெருமை கொள்கிறோம். ஒட்டுமொத்த தமிழ் இனமும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றால், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க, பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தினார்.

Updated On: 9 April 2021 10:25 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!