/* */

தமிழகத்தில் ரூ.500 கோடியில் 1000 பஸ்கள் வாங்க போவதாக அறிவிப்பு

தமிழகத்தில் ரூ.500 கோடியில் 1000 பஸ்கள் வாங்க போவதாக சட்டன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் ரூ.500 கோடியில் 1000 பஸ்கள் வாங்க போவதாக அறிவிப்பு
X

முதல்வர் ஸ்டாலின்.

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 17ம் தொடங்கியது. முதல் நாள் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டுசபை நிகழச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது. மறு நாள் மீண்டும் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது.

அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் சபாநாயகருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாததால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அத்துடன் அன்றைய தினம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்திய ஆறுமுசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை ஆகியவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டை வளமான, வலிமையான மாநிலமாகவும், அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றவும் பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சமூக மேம்பாட்டிலும், தனி மனித வளர்ச்சியிலும் கவனம் செலுத்தும் வகையில் நாள்தோறும் பல திட்டங்களை தீட்டி வருகிறோம். அனைவரின் நலனை முன்னிறுத்தியே திட்டங்கள் தீட்டப்படுகிறது. இதுவரை 3,337 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். அறிவிப்புகளின் நிலை கண்காணிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 78 சதவீத அறிவிப்புகள், அதாவது 2,607 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளன.

எஞ்சிய அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடவும், அரசாணை வெளியிட்டவற்றை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தரமான கல்வியை அரசுப்பள்ளிகள் வழங்கி வருகிறது.கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். புதிதாக சேர்ந்த மாணவர்களின் வசதிக்காக அரசுப்பள்ளிகளில் ஆயிரத்து 50 கோடி மதிப்பில் 7,200 வகுப்பறைகள் நடப்பு ஆண்டிலேயே புதிதாக கட்டப்படும். அரசுப்பள்ளிகளில் பாதுகாப்பான கற்றல் சூழல் உறுதி செய்யப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் பழுதடைந்த அனைத்து சாலைகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான சிறப்பு நிதியாக ரூ.2,200 கோடி வழங்கப்பட்டு 4,600 கி.மீ., நீளமுள்ள சாலைகள் நடப்பு ஆண்டிலேயே மேம்படுத்தப்படும். ரூ.7,388 கோடி மதிப்பில் 16,390 கி.மீ., நீளமுள்ள சாலைகள் படிப்படியாக மேம்படுத்தப்படும். 1.70 கோடி பயணிகள் அரசுப் பஸ்களில் பயணித்து வருகின்றனர். 44 லட்சம் பெண் பயணிகள் சராசரியாக இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். 2 ஆயிரம் கோடி அளவிலான பணம் மகளிருக்கு சேமிப்பாக மாறியுள்ளது. இதை அரசு வருமான இழப்பாக கருதவில்லை, மகளிருக்கான வளர்ச்சியாகவே இதை பார்க்கிறோம்.

மேலும் ரூ.500 கோடி மதிப்பில் 1,000 புதிய பஸ்களை வாங்க அரசு முடிவு எடுத்துள்ளது. நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பஸ்களை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,013 டீசல் பஸ்கள், 500 மின்சார பஸ்களை வாங்கிட நடவடிக்கை எடுத்து சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் அரசாக திமுக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Updated On: 22 Oct 2022 4:57 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...