தமிழகத்தில் மேலும் 249 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று மட்டும் 249 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
HIGHLIGHTS
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 57 ஆயிரத்து 382 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 124 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 40 பேருக்கும், கோவையில் 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 148 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், இதனால் தமிழகத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 18 ஆயிரத்து 25 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.
தமிழகம் முழுவதும் 1,332 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.