/* */

1.38 மில்லியன் மீன் குஞ்சுகள்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் 1.38 மில்லியன் வரி இறால் மீன் குஞ்சுகள் மன்னார் வளைகுடா பகுதியில் விடப்பட்டது

HIGHLIGHTS

1.38 மில்லியன் மீன் குஞ்சுகள்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை
X

மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பாக மீன் வளத்தை பெருக்கி மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் 1.38 மில்லியன் வரி இறால் மீன் குஞ்சுகள் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியில் கடலில் விடப்பட்டன.


மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளில் இறால் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து கடலில் விட்டு இறால் வளத்தை பெருக்கும் முயற்சியில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டு வருகிறது. 'பிரதமரின் மத்ஸ்ய சம்பத யோஜனா' திட்டத்தின் கீழ் இதற்காக ரூ. 168.948 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்குள் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் 200 மில்லியன் இறால் குஞ்சுகளை விடுவதே இந்த திட்டத்தின் நோக்கம். கடந்த 2017 – 2021 வரையிலான காலக்கட்டத்தில் 17.245 மில்லியன் வரி இறால் மீன் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் தமிழ்மணி, மூத்த ஆராய்ச்சியாளார் ஜான்சன், கடல் மீன் ஆராய்ச்சியாளர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் கலந்து கொண்டனர். இத்தகவல் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 17 Feb 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...