/* */

கலை & அறிவியல் கல்லூரி முதலாமாண்டு நேரடி வகுப்புகள் அக்.4 ல் தொடக்கம்

தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள், அக். 4 முதல் தொடங்குகின்றன.

HIGHLIGHTS

கலை &  அறிவியல் கல்லூரி முதலாமாண்டு நேரடி வகுப்புகள் அக்.4 ல் தொடக்கம்
X

கோப்பு படம் 

தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாமாண்டு நேரடி வகுப்புகள், வரும் அக்டோபர் 4 ம் தேதி முதல் தொடங்கும் என்று, கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க, கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. ஆன்-லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்தன. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல், 10ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்புகள் வரை, நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாமாண்டு நேரடி வகுப்புகள் தொடங்கும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உரிய வழி காட்டு நெறிமுறைகளுடன், வருகிற அக். 4 ம் தேதி முதல் நேரிடையாக வகுப்புகளை துவங்க வேண்டும். மாணவர்கள் தடுப்பசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று, கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 1 Oct 2021 3:13 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  2. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  3. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  4. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  6. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  7. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்