Begin typing your search above and press return to search.
அடுத்த 2 மணி நேரத்தில் எந்த மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை?
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானிலை ஆய்வு மையம் சார்பில் அவ்வப்போது மழை நிலவரங்களை முன்னதாகவே அறிவித்து வருகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை, கடலூர்,காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தேனி, கிருஷ்ணகிரி ஆகிய 16 மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதி ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.