/* */

நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி - 2 பேர் காயம்

நெல்லையில் தனியார் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி - 2 பேர் காயம்
X

நெல்லையில், தனியார் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பலியான இரு மாணவர்கள், 8ம் வகுப்பு படித்து வந்த சஞ்சய், விஸ்வரஞ்சன் என்று தெரிய வந்துள்ளது.

திருநெல்வேலி டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில், இந்த விபத்து நேரிட்டது. படுகாயமடைந்த மாணவர்கள் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தால், பள்ளி வளாகத்தில் பதற்றம் நிலவியது. பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து, குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் சென்றனர். மாணவர்கள் மூவர் இறந்த செய்தி கேட்டதும், சக மாணவர்கள் சிலர் ஆவேசமடைந்து, பள்ளியில் பொருட்களை சேதப்படுத்தினர். அத்துடன், சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.
Updated On: 17 Dec 2021 1:01 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!