/* */

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட 4 பேரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது..

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான முருகன் உள்ளிட்ட நான்கு பேரையும் இலங்கைக்கு அனுப்பக் கூடாது என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான கௌதமன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட 4 பேரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது..
X

இயக்குநர் கௌதமன்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்களில் பேரறிவாளன், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் தங்களது சொந்த வீடுகளில் வசித்து வருகின்றனர். நளினியின் கணவர் முருகன் மற்றும் சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரை இலங்கைக்கு அனுப்பக் கூடாது என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான கௌதமன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கௌதமன் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:

32 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் பலமுறை விடுதலை செய்ய சொல்லியும் கேளாமல் அதிகாரத்தை கையில் வைத்திருந்த ஆளுநர்கள் பன்வாரிலால் புரோகித், ஆர்.என். ரவி போன்றோர் நீதியை நிலை நாட்டாமல் காலம் தாழ்த்திவிட்ட நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றமே தனது கையில் எடுத்து முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 6 பேரையும் விடுதலை செய்திருப்பது வரவேற்பிற்குரியது.

விடுதலைப் பெற்றவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்குள் அதில் உள்ள நால்வரை மட்டும் தனிமைப்படுத்தி வெளிநாட்டவர்கள் என்று காரணம் கூறி மீண்டும் திருச்ச்சி சிறப்பு முகாமில் அங்குள்ள கைதிகளை கூட சந்திக்க விடாமல் அறைகளின் ஜன்னல், கதவுகளை கூட அடைத்து பூட்டி சிறை வைத்திருப்பது என்பது ஒரு கொடூர வன்முறை ஆகும்.

இத்தகைய ஈவு இரக்கமற்ற செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, தமிழ்நாடு அரசு உடனடியாக அவர்களை திறந்த வெளிக்குள் அனுமதித்து அவர்கள் விரும்புகிற அயல்நாட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

அதேசமயம், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், சிறப்பு முகாமில் உள்ள 4 பேரையும் இலங்கைக்கு விரைவில் அனுப்ப இருப்பதாக தெரிவிதிருப்பது கடும் அதிர்ச்சியை அளித்தது. தமிழ்நாடு அரசும், காவல் துறையும் முடிவு செய்யாமல் இப்படி ஒரு அறிவிப்பை ஆட்சியர் வெளியிடுவதற்கு வாய்ப்பே இல்லை.

சிறப்பு முகாமில் உள்ள முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரின் விருப்பம் இல்லாமல் சட்டம் ஒழுங்கு சரியில்லாத இன்றைய இலங்கைக்கு அனுப்புவது என்பது மீண்டும் அவர்களை கொலைக்களத்திற்கு அனுப்புவதற்கு ஒப்பான செயல் என்பதை உரிமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நான்கு பேரையும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்வதும் 32 ஆண்டுகள் கடும் தண்டனையை அனுபவித்து வந்து விட்ட பிறகும் கூட காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு பெரும் வித்தியாசம் இல்லை என்பதோடு தமிழர்களின் மீதுள்ள அவர்களின் வன்மம் என்றும் குறையவே குறையாது என்பதையே காட்டுகிறது.

விடுதலைக்குப் பிறகு தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தாலும் அல்லது நேர்மையற்ற கூட்டங்களின் வெற்று கூச்சல்களுக்கு மதிப்பளித்து நால்வரின் விருப்பம் இல்லாமல் இலங்கைக்கு அனுப்பினாலும் உலகம் முழுவதும் வாழ்கின்ற ஒட்டு மொத்த தமிழர்களின் மிகக் கடுமையான எதிர்ப்பை தமிழ்நாடு அரசு எதிர்கொள்ள வேண்டியது வரும் என்பதை தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பில் எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கௌதமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Nov 2022 12:12 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை