Begin typing your search above and press return to search.
பணியிடங்களில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம்
பெருநகர சென்னை மாநகராட்சி கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமரி தலைமையில் பணியிடங்களில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் 2013 உள்ளகப் புகார்க் குழுவின் கலந்தாய்வரங்கம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர்-1 ஜெயஸ்ரீ, இ.கா.ப., காவல் துணை ஆணையாளர் சியாமளா தேவி, இ.கா.ப., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் இயக்குநர் க.ஜெயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.