/* */

பெரியாரின் பொன்மொழிகள்..

Positive Periyar Quotes Tamil-தீண்டாமை ஒழிப்பு, சுயமரியாதை, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை, பெண் கல்வி, கடவுள் மறுப்பு உள்ளிட்டவற்றுக்காக குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்.

HIGHLIGHTS

Positive Periyar Quotes Tamil
X

Positive Periyar Quotes Tamil

Positive Periyar Quotes Tamil

ஈ.வெ. ராமசாமி என்ற இயற் பெயர் கொண்ட இவர், கடவுள் மறுப்பு, பெண் விடுதலை, ஜாதி ஒழிப்பு, சுதந்திர போராட்டம் என பல விதமான போராட்டங்களை தன் வாழ்வில் முன்னெடுத்து பல புரட்சிகளை செய்தனர். அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் வாழ்நாளில் நேரடி அரசியில் இடம்பெறவில்லை. ஆனால் இன்றும் அவரை மையமாக கொண்டு தான் அரசியல் இயங்குகிறது.

பெரியாரின் இக்கருத்துகள் யாவும் படித்த கருத்துகளோ, மேலை நாட்டு சிந்தனையோ அல்ல. தம் கண் முன் கண்ட காட்சிகளை கருத்தாக கூறியிருக்கிறார்.

பெரியாரின் பொன்மொழிகளில் சிலவற்றை இங்கு அளித்துள்ளோம்

ஒழுக்கம் என்பது சமுதாயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே தன்மையாக இருக்க வேண்டும்.

ஆணைத் தொழுதெழ வேண்டும் என்று பெண்ணுக்கு நிபந்தனையிருந்தால், பெண்ணைத் தொழுதெழ வேன்டும் என்று ஆணுக்கு நிபந்தனை இருக்க வேண்டும். இதுதான் ஆண்-பெண் சரிசம் உரிமை என்பது.

ஒவ்வொரு பெண்ணும்-தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கப்படி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால் எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான்.

கணவன் மனைவி என்பது கிடையாது, ஒருவருக்கொருவர் துணைவர்கள், கூட்டாளிகள் என்பதுதான் உண்மை.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமத்துவமான கல்வி அளிக்க ஏற்பாடு செய்வதே மக்கள் முன்னேற்றத்திற்கு ஏற்றதாகும்..

கல்வியினுடைய குறிக்கோள் என்பது பணம் சம்பாதிப்பது மாத்திரம் என்று நினைக்க கூடாது -

ஒரு சமூகத்திற்குச் சுயமரியாதை வேண்டுமானால் தொழிற் கல்வி மிக அவசியமானது.

தன் இனத்தையே அடிமைப்படுத்தி அதைக் கொடுமைபடுத்தி வாழும் கெட்ட குணம் மனித ஜீவனிடத்திலயே அதிகமாய் இருந்து வருகிறது.

மனிதன் உலகில் தன்னுடைய சுயமரியாதையை தன் மானத்தை உயிருக்கு சமமாக கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு படிப்பு சொத்துரிமை ஆகியவை இருந்து விட்டால் நாடு கண்டிப்பாக முன்னேற்றமடைந்து விடும். -

நமது நாட்டில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்திரத்தை கெடுப்பது என்று தான் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

தீண்டாமை ஓழிய வேண்டுமானால் சாதி ஓழிய வேண்டும். மதம், மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனைச் சாக்கடையாக்கும்.

முன்நோக்கிச்செல்லும் போது பணிவாக இரு.. ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள். -

எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டியதில்லை, எங்கே வழுக்கியது என்று தான் பார்க்க வேண்டும்

வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக்கூடாது. மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.

மற்றவர்களிடம் பழகும் வித்தையையும், ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே ஒருவன் கற்றுக்கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன்.

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும் கட்டுப்பாடும் உறுதியும் தியாக உணர்வும் வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் இறந்து போவது உண்மை தான். ஆனால் அவனுடைய முயற்சிகளும் அவனுடைய செயல்களும் அவனோடு இறந்து போவதில்லை.

ஆயிரம் அறிவாளிகளுடன் மோதுவதை விட சிரமமானது ஒரு முட்டாளுடன் மோதுவது.

உன் சலிப்பும் சோம்பேறித்தனமும் தற்கொலைக்கு சமம்.

உருவத்தில் மனிதனாகவும். செயலில் மிருகமாகவும் இருப்பதை விடுத்து மனித தன்மையுடன் வாழப்பழகி கொள்ளுங்கள்.

யார் சொல்லி இருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொல்லி இருந்தாலும், உன் அறிவுக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.

ஒருவனின் வாழ்வை அழகுபடுத்துவது அவனின் அறிவும் மானமும் தான். இவை இரண்டும் ஒருவனிடம் எப்போதும் இருக்க வேண்டும்.

ஒருவனின் மூட நம்பிக்கையும் குருட்டு பழக்கங்களும் தான் ஒருவனின் முதல் எதிரிகள். இவை இரண்டையும் இல்லாமல் செய்தால் தான் வாழ்வு சிறக்கும்.

மனிதனின் உயிர் நாடி என்பது அவனுக்கு இருக்கும் பகுத்தறிவு தான். பகுத்தறிவு இல்லாதவன் வாழ்ந்து பலனில்லை.

சிறந்த மக்களின் ஒழுக்கத்தையும் அறிவையும் கெடுப்பது இந்த மதுப்பழக்கம்.

மற்ற மனிதர்களிடம் பழகும் விதத்தையும், ஒழுக்கத்தையும் ஒருவன் தன் சிறு வயதிலேயே நன்றாக கற்றுக் கொண்டானால் அவனே வாழ்க்கையில் உயர்ந்த மனிதன் ஆவான்.

ஒருவன் தன்னிடம் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கின்றானோ, அப்படி எல்லோரிடமும் அவன் நடந்து கொள்ள வேண்டும். அதன் பெயர் தான் ஒழுக்கம்.

ஒழுக்க குறைவும், மூட நம்பிக்கையும் ஒருவனின் எப்படிப்பட்ட திறமையையும் வெளிக்கொண்டு வர விடாது.

ஒரு நாடு சொர்க்க பூமியாக மாற வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருப்பது அவசியம்.

ஒரு மனிதனிடம் உள்ள கல்வி அறிவும், பகுத்தறிவும், சுயமரியாதையும், நல்ல சிந்தனைகளும் தான் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் ஆயுதங்கள்.

மனிதனானவன் வாழ்க்கை என்பது அவனவன் வாழ்வதற்கு மட்டும் தான் என்று ஒருபோதும் கருதக்கூடாது. வாழ்க்கை என்பது மற்றவர்கள் நலனுக்கும் என்று சிந்திக்க வேண்டும்.

ஒருவனிடம் கடவுள் பக்தி இல்லாவிட்டால் எந்தவொரு இழப்பும் இல்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் தான் இழப்பு. ஒழுக்கம் என்பது தான் மிகவும் அவசியமானது.

மற்ற மனிதர்களுக்கு தொல்லை தராமல் வாழும் வாழ்வே சிறந்த ஒழுக்க வாழ்வு.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 11 March 2024 7:11 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...