/* */

பொங்கல் பரிசு: முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை

பொங்கல் பரிசு திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்

HIGHLIGHTS

பொங்கல் பரிசு: முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை
X

முதலமைச்சர் ஸ்டாலின் 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுகிறது. எப்போதும் பொங்கல் பரிசுத் தொகையாக ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் அரிசி, பருப்பு உள்ளிட்ட 21 மளிகைப் பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அ.தி.மு.க குற்றம் சாட்டிய நிலையில், இந்த ஆண்டு மீண்டும் பணமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நாளை முதலமைச்சர் .ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை சட்டசபை கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. 2023ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுத் தொகையாக ரூ. 1,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நடைமுறை குறித்து ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்த்தில் இது குறித்து அனைத்து அமைச்சர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை கூடும் தேதி, ஆளுநர் உரையில் இடம்பெறும் கருத்துகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது

Updated On: 18 Dec 2022 6:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  3. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  4. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  5. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  6. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  7. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  8. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  9. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  10. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!