/* */

திருச்சியில் ரவுடி சகோதரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

Rowdy Brothers-திருச்சியில் போலீசை தாக்கிய ரவுடி சகோதரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

HIGHLIGHTS

திருச்சியில் ரவுடி சகோதரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
X

போலீஸ் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ரவுடிகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சியில் போலீசாரை தாக்கிய ரவுடி சகோதரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை பிடித்தனர்.

Rowdy Brothers-திருச்சி உறையூர் பகுதி எம்.ஜி.ஆர்.நகரில் வசிப்பவர் துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம். இவர்கள் மீது கொலை, நகை திருட்டு உள்ளிட்ட சுமார் ௬௦க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் என்பிஐ வாரண்ட்டும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு உறையூர் பகுதியில் நடந்த ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக உறையூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மோகன் துரை, சோமசுந்தரம் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வந்தார்.

அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் குழுமாயி அம்மன் கோயில் அருகே நகை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நகை இருக்கும் இடத்தை கண்டறிய இருவரும் காவல் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது அந்த வாகனம் திடீர் என விபத்துக்குள்ளானது. இதனை பயன்படுத்திய துரை, சோமசுந்தரம் ஆகியோர் காவல் ஆய்வாளர் மோகனை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். முட்புதரில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தி மற்றும் அரிவாளை கொண்டு ஆய்வாளர் மோகன், தலைமை காவலர்கள் சிற்றரசு, அசோக் ஆகியோரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து காவல்துறையினர் தங்களை தற்காத்து கொள்ள இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரையும் மடக்கி பிடித்தனர். காயமடைந்த அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிடிபட்ட இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்தவர்களிடம் அரிவாள் எப்படி வந்தது என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு காவல் ஆணையர் சத்திய பிரியா அவர்கள் பிடிபட்ட போது அரிவாளை போலீசார் பறிமுதல் செய்து வைத்து இருந்தனர். போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியபோது அவர்கள் அதனை எடுத்து தாக்கி உள்ளனர் என விளக்கம் அளித்தார்.

போலீஸ் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ரவுடி சகோதர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 March 2024 6:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்