/* */

சிறந்த நீர்மேலாண்மை: தேசிய விருது வென்று வெள்ளப்புத்தூர் ஊராட்சி சாதனை

சிறந்த நீர் மேலாண்மைக்காக, அச்சிறுபாக்கம் ஒன்றியம் வெள்ளப்புத்தூர் ஊராட்சி, தேசிய விருதை பெற்று தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளது.

HIGHLIGHTS

சிறந்த நீர்மேலாண்மை: தேசிய விருது வென்று வெள்ளப்புத்தூர் ஊராட்சி சாதனை
X

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோரை, வெள்ளப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வரதன், துணை தலைவர் ப.விஜயகுமார், ஊராட்சி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளபுத்தூர் ஊராட்சி, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பாக, மூன்றாவது தேசிய நீர் மேலாண்மை விருதுகள் -2020 -ஐ பெற்றுள்ளது. இந்த விருதுக்கான பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம் பெற்றுள்ளது. அதில், தெற்கு மண்டலத்தில் செங்கல்பட்டு மாவட்டம், வெள்ளபுத்தூர் ஊராட்சி 2வது இடத்தில் தேர்வாகியுள்ளது.

தேசிய அளவில் விருதை வென்று தமிழகத்திற்கு வெள்ளபுத்தூர் ஊராட்சி பெருமை சேர்த்திருக்கிறது. அந்த ஊராட்சி நிர்வாகத்தினரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த சூழலில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோரை வெள்ளப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வரதன், துணை தலைவர் ப.விஜயகுமார், ஊராட்சி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் சந்தித்து இனிப்பு வழங்களை வழங்கி வாழ்த்து பெற்றனர். மேலும், மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு, ஊராட்சி சார்பாக நன்றியை தெரிவித்து கொண்டனர்.

Updated On: 8 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’