/* */

லிப்டில் சிக்கிக் கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் லிப்டில் மாட்டிக்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

HIGHLIGHTS

லிப்டில் சிக்கிக் கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்
X

லிப்டில் சிக்கிய அமைச்சரை மீட்கும் பணியாளர்கள்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சிறப்பு மற்றும் அறுவை சிகிச்சை துறை கட்டிடத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்திருந்தார்.

நிகழ்ச்சி நிறைவு பெற்றதையடுத்து மூன்றாவது தளத்திலிருந்து தரை தளத்திற்கு லிப்டின் மூலம் அமைச்சர், அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று லிப்டின் இயக்கம் தடைபட்டதால் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் 'ஐட்ரீம்' மூர்த்தி, வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, சுகாதார துறை செயலாளர் செந்தில் குமார், மற்றும் மருத்துவ கல்வி இயக்குநர் சாந்தி மலர் ஆகியோர் லிப்டில் சிக்கி கொண்டனர். லிப்ட் நின்றதால் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

சிக்கிக் கொண்ட அவர்களை மீட்க லிப்ட் ஆபரேட்டர் உதவியுடன் லிப்டின் ஆபத்து கால கதவின் வழியே, சிக்கிகொண்ட அனைவரையும் வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 10 நிமிடங்கள் போராட்டத்திற்கு பின் லிப்ட் ஆபரேட்டரின் உதவியுடன் அமைச்சர் மற்றும் உடனிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது லிப்டை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் இதேபோன்று லிப்ட் பிரச்சனை இருந்தது, அங்கு இருக்கும் 24 லிப்டுகளையும் உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 17 லிப்டுகள் தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. அதே பிரச்சனை தற்பொழுது ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் ஏற்பட்டு இருக்கிறது. உடனடியாக பழுதடைந்த லிப்டுகளை மாற்றி விட்டு புதிய லிப்ட்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

Updated On: 30 Nov 2022 4:34 AM GMT

Related News