/* */

சிதறிய உடல்கள்... பதறிய உள்ளூர் மக்கள்: விபத்து நடந்தது எப்படி?

குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் தள்ளாடி கீழே விழுந்து நொறுங்கியதாக, நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

சிதறிய உடல்கள்... பதறிய உள்ளூர் மக்கள்: விபத்து நடந்தது எப்படி?
X

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதி. 

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் அருகே இன்று பகலில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை அருகே, 11 .47 -க்கு புறப்பட்ட எம்.ஐ. 17வி5 ரக ரஷ்ய தயாரிப்பான ஹெலிகாப்டர், 12:20 மணியளவில், குன்னூர் வனப்பகுதியில், தீப்பிழம்புடன் விழுந்து நொறுங்கியது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில், இதில், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, மகள் உள்ளிட்டோர் இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த விபத்தில் 7 பேர் வரை இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் மூவர் மீட்கப்பட வேண்டும்.

குன்னூர் வெலிங்டன் பகுதியில் இன்று பிற்பகல் நடக்கும் நிகழ்ச்சியில் பிபின் ராவத் பங்கேற்க இருந்த நிலையில் விபத்து நேரிட்டுள்ளது. தரையிறங்க வேண்டிய இடத்திற்கு 10 கி.மீ தொலைவுக்கு முன்பாக இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

குன்னூர் காட்டேரி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, கடும் பனிமூட்டம் இருந்ததாகவும், ஹெலிகாப்டர் தள்ளாடியதாகவும் நேரில் பார்த்தவர்கள் சிலர் கூறினர். அதன் பின்னர் பயங்கர சத்தத்துடன் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து வெடித்து சிதறியதாக, அவர்கள் மேலும் கூறினர். அதிக வீரியம் கொண்ட விமான பெட்ரோல் பயன்படுத்தப்பட்ட நிலையில், தீ கொழுந்துவிட்டு எரிந்ததாகவும், ஒரு மணி நேரத்திற்கு மேல் ஹெலிகாப்டர் எரிந்து கொண்டிருந்ததாகவும், நேரில் பார்த்தவர்களை மேற்கொள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

வனப்பகுதி என்பதால், மீட்பு வாகனங்கள், தீயணைப்பு வண்டிகள் செல்வதில் சிக்கல் இருந்துள்ளது. விபத்து பகுதியில் கருகிய நிலையில் உடல்கள் சிதறிக்கிடந்ததாகவும் தீ பயங்கர ஜுவாலையுடன் எரிந்ததால், அருகில் நெருங்க முடியவில்லை என்றும் பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர். எனினும் உயிரை பொருட்படுத்தாமல், முதலில் உள்ளூர் மக்கள்தான் முதலில் தீயணைப்பு முயற்சியில் இறங்கியுள்ளனர். அதன் பின்னரே மீட்புக்குழுவினர் வந்துள்ளனர்.

Updated On: 9 Dec 2021 2:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’