/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள  241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளில் இன்று மே தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை ஒன்றியத்தில் பட்டமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள 500 கூரை வீடுகளை தொகுப்பு வீடுகளாக மாற்றி தர வேண்டும் என்றும், மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியில் 200 குடும்பங்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குவது என்றும், மன்னம்பந்தல் ஊராட்சியில் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு என். பி. எச். எச். கார்டுகளை பி. எச். எச். கார்டுகளாக மாற்றி தர வலியுறுத்தியும், குளிச்சாறு ஊராட்சியில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள ஊராட்சி அலுவலகக் கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் நல்லத்துக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் பங்கேற்று கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார். கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

Updated On: 1 May 2022 3:16 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...