/* */

நாளை முதல் ஊரடங்கு: மயிலாடுதுறையில் மக்கள் நெரிசல்

நாளை முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு என்பதால் மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசல். பாதுகாப்பு பணியில் போலீசார்

HIGHLIGHTS

நாளை முதல் ஊரடங்கு:  மயிலாடுதுறையில் மக்கள் நெரிசல்
X

மயிலாடுதுறையில் மக்கள் நெரிசல்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாளையிலிருந்து வருகின்ற 24ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சனிக்கிழமை அன்றும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட ஞாயிற்றுக்கிழமையான இன்றும் 2 நாட்களுக்கு அனைத்துகடைகளையும் திறக்க அனுமதியளித்தது.

நாளையிலிருந்து அத்தியாவசிய கடைகள் மட்டும் காலையிலிருந்து மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று அனைத்து கடைகளும் மயிலாடுதுறை நகரில் திறக்கப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க குவிந்தனர். ஜவுளிக்கடைகளில் அதிக அளவில் பொதுமக்களின் கூட்டம் காணப்பட்டது.

பெரிய கடை வீதி வண்டிக்கார தெரு பேருந்து நிலைய பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 9 May 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  3. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  4. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  5. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  6. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  8. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  9. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்