/* */

மயிலாடுதுறை அருகே அரசு கல்லூரியில் 4 மின்விசிறிகள் திருட்டு

மயிலாடுதுறை அருகே அரசு கல்லூரியில் 4 மின்விசிறிகள் திருட்டு போனதால் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே அரசு கல்லூரியில் 4 மின்விசிறிகள் திருட்டு
X

மணல் மேடு அரசு கல்லூரி (பைல் படம்).

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வகுப்பறையில் இருந்த 4 மின் விசிறிகளை மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து திருடிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் மணல்மேடு காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியில் வாட்ச்மேன் இருந்தும் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றிருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இதுபோன்ற சம்பவம் இக்கல்லூரியில் இரண்டாவது முறை நடைபெறுவதாகவும் முறையான சி.சி.டி.வி. வசதி மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தின் காரணமாகவே திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக கல்லூரியில் பயிலும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இதனை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி அருகே நாளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 28 April 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  2. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  4. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  7. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  8. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  9. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  10. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு