/* */

கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!

கோடை காலத்தில் குறைந்த செல்வில் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து அதி வருமானம் ஈட்ட மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
X

வம்பன்8 உளுந்து விதை பெற்ற விவசாயிகள் 

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் கோடை பருவத்தின்போது உளுந்து,எள், நிலக்கடலை, பயிர் வகைகள் சாகுபடி செய்ய சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேளாண்மை மதுக்கூர் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் நடப்பு கோடைப் பருவத்தில் உளுந்து, எள், நிலக்கடலை மற்றும் பயிர் வகைகளை சாகுபடி செய்வதற்கான சிறப்பு திட்டம் வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுக்கூர் வட்டாரத்தில் நடப்பு கோடைப்பருவத்தில் உளுந்து, எள் மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களை சாகுபடி செய்வதற்கான கோடை சாகுபடி சிறப்பு திட்டமானது தற்போது வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் உளுந்து, எள், மற்றும் நிலக்கடலை போன்ற குறைந்த கால பயிர்களை கோடைப்பருவத்தில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு மாற்றுப்பயிர் சாகுபடி செய்வதற்கு முன்பாக நிலத்தில் கோடை உழவு செய்யவும் விவசாயிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கோடை உழவின் நன்மைகள்

கோடை உழவு செய்வதனால் விவசாய நிலங்களில் உள்ள பூச்சி மற்றும் பூஞ்சாணங்கள் அழிக்கப்படுவதோடு மண்ணின் அடியில் உள்ள களை விதைகள் மற்றும் தீமை செய்யும் புழுக்கள் பறவைகளுக்கு இரையாகவோ அல்லது வெயிலின் தாக்கத்தினால் காய்ந்தோ அழிந்து விடும். மேலும், கோடை மழை பெய்யும்போது மழைநீர் தேங்குவதனால் மண்ணுக்கு அடியில் காற்று புகுந்து இலகுவாகி எப்போதும் ஈரப்பதம் இருக்கும்.

பயிரிடும்போது அதன் வேர்கள் எளிதாக மண்ணில் பரவி செழிப்பாக வளரும். இவ்வாறு கோடை உழவு செய்வதன் மூலமாக அடுத்த சாகுபடிக்கான உரத் தேவை குறையும், நீர் நிலத்தில் தக்க வைக்கப்படும், பூச்சி – பூஞ்சாண தொல்லைகள் குறையும், களைகள் கட்டுப்படுத்தப்படும், மண்ணிற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து பயிர்கள் செழிப்பாக வளர்ந்து கூடுதல் மகசூல் கிடைக்கும்.

கோடையில் மாற்றுப்பயிராக பயறு வகை பயிர்களை சாகுபடி செய்யும்போது அவற்றின் வேர் முடிச்சுகளில் தழைச்சத்து (N) சேகரிக்கப்பட்டு மண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது. இதேபோல் குறைந்த வயதில் அதிக நீர் தேவையின்றி குறைந்த சாகுபடி செலவில் அதிக லாபம் ஈட்டக் கூடிய எள் பயிரினையும் கோடையில் சாகுபடி செய்யலாம்.

கோடை உழவின் நன்மைகள் குறித்து விளக்கமளிக்கும் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர்.திலகவதி.

பயறு வகை சாகுபடி

எள்

எள் சாகுபடி செய்ய ஏக்கருக்கு 2 கிலோ விதை அளவே போதுமானது ஆகும். எள் பயிரானது அனைத்து வகை மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது. நிலக்கடலை பயிரினை நல்ல நீர் ஆதாரம் உள்ள மேட்டுப்பாங்கான நிலங்களில் பயிரிட்டு அதிகலாபம் ஈட்டலாம். மேற்கண்ட அனைத்து பயன்களையும் கருத்தில் கொண்டு மதுக்கூர் வட்டார அனைத்து விவசாயிகளும் நடப்பு கோடைப் பருவத்தில் மேற்கண்ட குறுகிய கால மற்றும் மண் வளம் காக்கும் பயிர்களை பயிரிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வம்பன்8 உளுந்து

மேற்கண்ட பயிர் சாகுபடிக்கு தேவையான உளுந்து வம்பன்8.சான்று விதைகள் மற்றும் உயிர் உரங்கள் தற்சமயம் மதுக்கூர் மதுக்கூர் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பில் உள்ளது. விவசாயிகள் அவற்றை விதை கிராமத் திட்டத்தின் கீழ் கிலோ விற்கு ரூ.48 மானியத்தில் பெற்று பயன்பெறலாம்.

மேலும் மானியமில்லா இடுபொருட்களான நுண்ணூட்ட கலவைகள் மற்றும் நோய் தாக்குதலை தடுக்க பயன்படுத்தப்படும். உயிரியியல் கட்டுப்பாட்டு காரணிகளான சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மாவிரிடி ஆகிய இடுபொருட்களையும் அனைத்து வேளாண் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்று பயன்பெறலாம்.

வேளாண் உதவி அலுவலர்களால் அவர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் கோடை உளுந்து சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு முனைப்பு இயக்கங்கள் நடைபெற்று வருன்றன.

அத்திவெட்டி கிராமம் மாரியம்மன் கோவிலில் விவசாயிகளிடம் கோடை உளுந்து சாகுபடி செய்வதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. இதுதவிர இத்திட்டத்தின் கீழ் கோடை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முதலமைச்சரின், ‘மண்ணுயிர் காத்து மன்னுயர் காப்போம்’ திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படவுள்ள பசுந்தாள் உர விதை விநியோகத்திலும் முன்னுரிமை வழங்கப்படும்.

கோடைப்பயிர் சாகுபடிக்கு பிந்தைய நாட்களில் பசுந்தாள் உர விதைகளை விதைத்து 45 நாட்களில் (அதாவது பூ பூக்கும் பருவத்தில்) மடக்கி உழுவதன் மூலமாக தழைச்சத்தானது மண்ணில் நிலை நிறுத்தப்பட்டு மண்ணின் தரம் மேம்படுத்தப்படுகிறது. மண்ணிலுள்ள கரிமச்சத்தின் அளவும் படிப்படியாக அதிகரித்து மண்ணின் வளம் பேணப்படுகிறது.

எனவே, ஆழ்துளைக் கிணறுகளில் நீர் ஆதாரம் உள்ள விவசாயிகள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்குள் எள், நிலக்கடலை மற்றும் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்து அதிக லாபம் பெறவும், மண் வளத்தை பாதுகாக்கவும் வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முனைப்பு இயக்கத்துக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.

அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழு நிர்வாகிகள் வைரவமூர்த்தி, வடிவேல் மூர்த்தி, பாலசுப்பிரமணியன் மற்றும் முன்னோடி விவசாயிகள் ராஜம் கிருஷ்ணன், அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கான உளுந்து விதை ரகத் தேர்வு குறித்து எடுத்துக் கூறினார்.

சிசி அலுவலர் இளமாறன்,வைசாலினி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். வேளாண் இணை இயக்குனர் அலுவலக வேளாண் அலுவலர் சாய்னா விவசாயிகளுக்கு வம்பன்8 விதைகளின் திறன் பற்றி கூறி விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கினார்.

Updated On: 2 May 2024 7:02 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு