Begin typing your search above and press return to search.
2 கைகள் இல்லாத நிலையிலும் நம்பிக்கையுடன் பிளஸ்- 2 தேர்வு எழுதிய மாணவி
மயிலாடுதுறையில் 2 கைகளும் இல்லாத நிலையிலும் நம்பிக்கையுடன் மாணவி பிளஸ்- 2 தேர்வு எழுதி உள்ளார்.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 89 பள்ளிகளில் கல்வி பயிலும் 5042 மாணவர்களும் 5353 மாணவிகள், 52 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 395 மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதுகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு கைகளும் இல்லாத லெட்சுமி என்ற மாணவி ஆசிரியை உதவியுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினார். பிறந்தபோது இரண்டு கைகளும் இல்லாத பெண் குழந்தை என்பதால் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு மயிலாடுதுறை ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில் இவர், இரண்டு வயது குழந்தையாய் இருந்தபோது இருந்தே வளர்ந்து வருகிறார். தற்போது தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவியை பலரும் பாராட்டினர்.